வடகொரிய தலைவர் கிம் யொங் உன் னின் மேற்பார்வையின் கீழ் ஒரே சமயத்தில் பல ஏவுகணைகளை ஏவக்கூடிய ஏவுகணை ஏவும் முறைமை மூலம் ஏவுகணைகள் ஏவிப் பரிசோதிக்கப்பட்டதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கே.சி.என்.ஏ. நேற்று ஞாயிற்றுக்கிழமை அறிக்கையிட்டுள்ளது.
மேற்படி ஏவுகணைப் பரிசோதனையானது அணு ஆயுதக் களைவு தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு ஒரு சவாலாக அமைவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இரு குறுந்தூர ஏவுகணைகள் கடலுக்குள் ஏவிப் பரிசோதிக்கப்பட்டதாக தோன்றுவதாக தென்கொரிய இராணுவம் கூறுகிறது.
அமெரிக்காவாலும் தென்கொரியாவாலும் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இராணு வப் பயிற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த ஏவுகணைகளை ஏவிப் பரிசோதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போது தனது நாட்டால் உருவாக்கிப் பரிசோதிக்கப்பட்ட முறைமையானது மாபெரும் ஆயுதமொன்றாகவுள்ளதாக கூறிய கிம் யொங் உன், அதனை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளதாக வடகொரியாவின் உத்தியோகபூர்வ செய்தி முகவர் நிலையமான கே.சி. என்.ஏ குறிப்பிட்டுள்ளது.
இத்துடன் நாடு எதிர்கொண்டுள்ள இராணுவ ரீதியான அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தம் என்பனவற்றை முறியடிக்கக் கூடிய வகையில் ஆயுதங்களை விருத்தி செய்வது நாட்டிற்குத் தேவையாகவுள்ளதாக கிம் யொங் உன் இதன்போது தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மேற்படி ஏவுகணை ஏவும் நடவடிக்கையை கிம் யொங் உன் மேற் பார்வை செய்வதை வெளிப்படுத்தும் புகைப்படங்கள் வடகொரிய உத்தியோக பூர்வ ரொடொங் சின்மன் பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM