மதுவரித் திணைக்களத்தின் கல்முனை பிராந்திய அலுவலகம் கடந்த ஆறுமாத காலத்திற்குள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் ஹெரோயின், கேரள கஞ்சா, சட்டவிரோத மதுபானம் என்பனவற்றை விற்பனை செய்த குற்றத்திற்காக 264 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதானவர்கள் கல்முனை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று ஆகிய நீதிமன்றங்களில் ஆஜர் செய்யப்பட்டு இவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய அலுவலக பொறுப்பாளரும் பிரதான பரிசோதகருமான சண்முகம் தங்கராஜா தெரிவித்தார்.
இவ்வாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளில் ஹெரோயின் வைத்திருந்தவர்களுக்கு எதிராக கல்முனை மேல் நீதிமன்றத்தில் அதிகளவான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஆகிய பிரதேசங்களில் ஹெரோயின் மற்றும் கேரளக் கஞ்சா என்பனவற்றை வைத்திருந்த நபர்களை கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM