(ஆர்.விதுஷா)
சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் ராஜித சேனாரத்ன தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக 29 பேரை சுகாதார அமைச்சில் நியமித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் வசந்த பெரேராவிடத்தில் முறையிடவுள்ளதாகவும் கடந்த வெள்ளிக்கிழமை சங்கத்தின் தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அதன் செயலாளர் வைத்தியர் ஹரித அளுத்கே தெரிவித்தார்.
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் தனிச்சையான செய்பாடுகளின் நிமித்தம் சுகாதார அமைச்சினுள் ஊழல் மோசடிகள் இடம் பெற்று வருகின்றன. இது தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு உள்ளடங்கலாக 13 இடங்களில் முறைப்பாடு செய்துள்ளோம். அவர் மீது நாம் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரபூர்வமானவையாகும்.
இவ்வாறானதொரு நிலையில் சுகாதார அமைச்சர் தமது அமைச்சிற்கு 29 பேரை உள்வாங்குவதற்கான நடடிவக்கைகளை மேற்கொண்டுள்ளார் என்றும் அவர் அதன்போது சுட்டிக்காட்டினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM