அனைத்து தேசிய பூங்காக்களுக்கும் மூன்று நாள் பூட்டு!

Published By: Vishnu

25 Aug, 2019 | 11:08 AM
image

நாடளாவிய ரீதியில் காட்டு யானைகளை கணக்கெடுப்பை கருத்திற் கொண்டு நாட்டின் அனைத்து தேசிய பூங்காக்களும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை மூடப்படும் என்று வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த யானைகள் கணக்கெடுப்பானது எதிர்வரும் செப்டெம்பர் 13 ஆம், 14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. வனஜீவராசிகள் திணைக்களத்தினால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

இந்த நடவடிக்கைகளுக்காக நீர் நிலைகளுக்கு அருகிலுள்ள சுமார் 250 வனப் பிரதேசங்கள் குறித்த திணைக்களத்தினரால் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக, திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ஹசினி சரச்சந்திர தெரிவித்துள்ளார்.

4,500 பேரை இணைத்து யானைகளை கணக்கெடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இறுதியாக கடந்த 2011 ஆம் ஆண்டிலேயே யானைகளை கணக்கெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்பதோடு, அவ்வேளையில் காட்டு யானைகளின் எண்ணிக்கை 5,879 ஆகும். எவ்வாறாயினும் இக்கணக்கெடுப்பின்போது, வடக்கு, கிழக்கில் சில இடங்களில் அப்போது கணக்கெடுப்பு மேற்கொள்ள முடியாதிருந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இது நாடு முழுவதும் காட்டு யானைகளை கணக்கெடுக்கும் முதலாவது நடவடிக்கையாகும். நீர் நிலைகளை அண்டிய வண்ணம் கணக்கெடுப்பு நிலையங்கள் அமைக்கப்படும். ஏனெனில், 24 மணி நேரத்தில் யானைகள் நீர் நிலைகளை நாடி வரும். இக்கணக்கெடுப்புக்கு வரண்ட காலநிலை உகந்ததாகும். குறித்த நடவடிக்கைக்காக நாங்கள் பௌர்ணமி தினத்தை தெரிவுசெய்துள்ளோம், ஏனெனில் கணக்கெடுப்புக்கு நிலா ஒளி அதிக நன்மை பயக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த கணக்கெடுப்பிற்காக சுமார் 80 மில்லியன் ரூபா வரை செலவாகுமென்று வனஜீவராசிகள் திணைக்களம் கணக்கிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31