(செ.தேன்மொழி)
புத்தளம் - அருவக்காடுக்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மற்றும் அதன் பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தில்லடி பகுதியில் வைத்து குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மீதும் பாதுகாப்பிற்காக சென்ற பொலிஸ் வாகனத்தின் மீதும் இன்று அதிகாலை கற்களால் தாக்குதலை மேற்கொண்டவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம் - தில்லடி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நாலக பிரசன்ன என்பவரே இவ்வாறு கைது செயற்றப்பட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு எதிராக பொது சொத்துகளை சேதம் படுத்தியமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் பொலிஸார் சந்தேக நபரை புத்தளம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதன்போது நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை அவர் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரிவிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM