15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய குடும்பஸ்தர்: குழந்தையை பிரசவித்த சிறுமிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Published By: J.G.Stephan

24 Aug, 2019 | 01:17 PM
image

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியொருவரை கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் குடும்பஸ்தரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொககெர்க்கஸ் வோல்ட் கீழ் பிரிவு தோட்ட பகுதியில் வசித்த 15 வயது சிறுமி, குழந்தை ஒன்றை பிரசவித்த சம்பவம் நேற்று (23.08.2019) வெள்ளிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த 15 வயது சிறுமி கர்ப்பம் தரித்த விடயம் வெளியானதை தொடர்ந்து, சிறுமி கடந்த 3 தினங்களுக்கு முன்பு டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து, சிறுமி குழந்தையை பிரசவித்துள்ளார்.



பிரசவிக்கபட்ட குழந்தைக்கு 5 மாதங்கள் மட்டுமேயென்பதால், குழந்தை இறந்தே பிறந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 

இது குறித்து, விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸாருக்கு, தாம் கர்ப்பம் தரித்தமைக்கான காரணம் கினிகத்தேன பகுதியை சேர்ந்தவர் என சிறுமி வழங்கபட்ட வாக்குமுலத்தில் குறிப்பிட்டுள்ளார். 

இந்நிலையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யபட்டுள்ளதாகவும் சந்தேக நபர் திருமணமானவர் என கினிகத்தேன பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த சிறுமி தொடர்ந்தும் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். 

மேலும், கைது செய்யபட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டுள்ளதோடு, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20