கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வீட்டில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது குறித்த விபத்தில் அவர் மற்றும் குடும்பத்தினர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவலை வெளியிட்டுள்ளது.
கேரள மாநிலம் கல்கத்தாவில் அமைந்துள்ள ஸ்ரீசாந்த்தின் வீடு அவரும், மனைவி மற்றும் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், இன்று அதிகாலை 2 மணிக்கு ஸ்ரீசாந்த் வீட்டின் முன்பகுதியில் இருந்து கரும்புகை கிளம்பியது. காற்று பலமாக வீசியதால் சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிந்துள்ளது.
ஸ்ரீசாந்த் வீட்டில் தீ எரிவதை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். திருக்காக்கரா மற்றும் காந்திநகர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து வீரர்கள் விரைந்து வந்தனர்.
அவர்கள், ஸ்ரீசாந்த் வீட்டில் இருந்து தீயை அணைத்தனர். என்றாலும் வீட்டின் முன்பக்க அறை எரிந்து சேதமாகியுள்ளது. குறித்த தீ விபத்தின் போது வீட்டில் ஸ்ரீசாந்த்தும், அவரது மனைவி மற்றும் குழந்தைகளும் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக அவர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.
இதற்கிடையே தீ விபத்திற்கான காரணம் குறித்து கல்கத்தா பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீசாந்த், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றபோது மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் சபை, அவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆயுட்கால தடை விதித்தது.
சமீபத்தில்தான் இந்திய கிரிக்கெட் சபை இந்த தடையை 7 ஆண்டுகளாக குறைத்தது. இதையடுத்து ஸ்ரீசாந்த் வருகிற 2020ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் அவரது வீட்டில் தீ விபத்து நிகழ்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM