இந்தியாவில் முதல் முறையாக பழங்குடியின பெண்கள் மகாராஷ்டிர அரச போக்குவரத்து கழக சாரதி பணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தில் பழங்குடியின பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி அவர்களை பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடைய செய்ய அரசாங்கம் திட்டங்களை செயற்படுத்தி வருகிறது. அதில் முக்கிய திட்டம், பழங்குடியின பெண்களுக்கு கனரக வாகனங்களை செலுத்துவதற்கு பயிற்சி வழங்கி, வேலைவாய்ப்பு வழங்குவது ஆகும்.
அதன்படி, சமீபத்தில் மகாராஷ்டிர மாநில வீதி போக்குவரத்துக் கழகம், 163 பழங்குடியின பெண்களை தெரிவு செய்துள்ளது. போக்குவரத்து கழகத்தின் இந்த முன்முயற்சியை முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் தொடங்கி வைத்தார்.
தற்போது தெரிவு செய்யப்பட்டுள்ள பெண்களுக்கு உரிய சாரதி பயிற்சி வழங்கப்பட்டு, அதன்பின்னர் அரச பஸ்களை செலுத்தும் சாரதி பணியில் அமர்த்தப்படுவார்கள்.
இந்நிகழ்ச்சியில் பிரதீபா பாட்டீல் இவ்வாறு தெரிவித்துள்ளார்,
“பெண் சாரதிகளுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். நீண்ட தொலைவுக்கு பெண் சாரதிகளை அனுப்ப கூடாது. இரவு நேரத்தில் சில இடங்களில் தங்கியிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால், தங்குவதற்கு பாதுகாப்பான இடம் வழங்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM