நாட்டின் பல பாகங்களில் இன்றும் காற்றுடன்கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்றும் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையத்தின் வானிலை அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் சப்ரகமுவ மற்றும் நுவரெலிய மாவட்டங்களில் சில இடங்களில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நாட்டின் மத்திய, வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
சில இடங்களில் காற்றின் வேகம் மணிக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீற்றர் வரை அதிகரிக்க கூடும் என்பதால் மீனவர்கள் மற்றும் கடற்படை சமூகமும் அது தொடர்பில் அவதானமாக செயல்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM