தமிழகத்தை நடித்தவர்கள் ஆண்டது போதும், இனி படித்தவர்கள் ஆளட்டும் என்று தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, தருமபுரி மாவட்டத்தில் 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்தால், அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களையும் நிறைவேற்றலாம். இதை இந்த அரசு செய்ய மறுக்கிறது.
தமிழகத்தை 50 ஆண்டு காலம் மாறி, மாறி திராவிடக் கட்சிகள் ஆண்டன. அப்போதெல்லாம், மக்கள் வளர்ச்சிக்காக எதையும் செய்யாதவர்கள் மீண்டும் வாய்ப்பைத் தாருங்கள் என்கின்றனர். கடந்த காலங்களில் வாய்ப்பளித்து மக்களுக்கு நன்மை செய்யாதவர்களினால் இப்போதும் மட்டும் எப்படி செய்ய முடியும்?
நடித்தவர்கள் தமிழகத்தை ஆண்டதும் போதும், இனி படித்தவர்கள் ஆளட்டும். அதற்காக, தமிழகத்தை ஆள எனக்கு ஒரு வாய்ப்பைத் தாருங்கள். 5 ஆண்டுகள் மட்டும் எங்களுக்கு போதும். அதற்கு மேல் நான் உங்களிடத்தில் வாய்ப்பைக் கேட்க மாட்டேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM