“யாழில் திறக்கவுள்ள ஓ.எம்.பி அலுவலகத்திற்கு தமிழ் அரசியல் வாதிகள் துணைநிற்க கூடாது” 

Published By: Digital Desk 4

22 Aug, 2019 | 02:32 PM
image

யாழ்ப்பாணத்தில் எதிவரும் 24 ஆம் திகதி திறக்கப்படவுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிராந்திய அலுவலகத்திற்க்கு தமிழ் மக்களின் அரசியல் பிரதிதிநிதிகள் எவரும் துணைக்நிற்க கூடாது என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார்.

இன்று 22-08-2019 கிளிநொச்சியில் உள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

 வலிந்து காணாமல்  ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஓ.எம்.பி அலுவலகத்தை நிராகரித்து எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில் 24 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் அதன் பிராந்திய அலுவலகம்  திறக்கப்படுவது எமக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. 

அத்தோடு ஓ.எம்.பி அலுவலகம் திறப்புக்கு தமிழ் அரசியல்வாதிகள் எவராவது சென்றால்   முதலில் அவர்கள் எங்களது உறவுகளுக்கு பதிலை வழங்கிவிட்டு செல்லுங்கள் என நாம் அவர்களிடம் கோருகின்றோம் எனத் தெரிவித்த  கோகிலவாணி.

 இம்மாதம் 30 ஆம் திகதி வவுனியா ஓமந்தையில் சர்வதேச காணாமல் ஆக்கப்பட்ட தினத்தில் வடக்கு தழுவிய ரீதியில் மாபெரும் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளளோம், இறுதி யுத்தக் காலத்தில்  பெருமளவான உறவுகள் ஓமந்தை பகுதியிலேயே கையளிக்கப்பட்டனர். 

இந்த இடத்திலேயே  வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் கிழக்கில் அம்பாறையிலும் போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளோம். எனவே இந்தப் போராட்டத்தில் அரசியல் வேறுபாடுகளை கடந்து அனைவரையும் கலந்து ஆதரவு தருமாறு கோருவதாக அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22