(நா.தினுஷா)
ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியும் மக்கள் விடுதலை முன்னணியும் ஜனாதிபதி வேட்பாளரை அறிவித்து விட்டன என்பதற்காக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளரை அவசரமாக அறிவிக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது.
தற்போதே எங்களின் வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று கேட்பது முட்டாள் தனமானதாகும். எங்களின் வேட்பாளர் பட்டியிலில் நான்கு பேர் இருக்கிறார்கள். கட்சியின் இறுதித் தீர்மானத்துக்கு அமைய சரியான நேரத்தில் வேட்பாளரை அறிவித்து வெற்றியை நிலைநாட்டுவோம் என்று ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பனர்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷா விதானகே, சமிந்த விஜயசிறி, பாலித ரங்கே பண்டார மற்றும் ஆசு மாரசிங்க ஆகியோர் இரு ஊடகவியலாளர் சந்திப்புகளை இன்று புதன் கிழமை அலரிமாளிகையில் நடத்தினர்.
இதன் போதே தமது அவர்கள் தமது நிலைபாட்டினை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள்.
ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் பட்டியலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் சஜித் பிரேமதாச, சபாநாயகர் கருஜயசூரிய மற்றும் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களில் யார் வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டாலும் நிச்சயமாக அவர்களின் வெற்றிக்கு எங்களின் ஆதரவு கிடைக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM