காஷ்மீர் விடயத்தில் இந்தியாவின் பிரகடனத்தை  இலங்கை முன்னுதாரணமாக கொள்ள வேண்டும்  - சம்பிக 

Published By: Digital Desk 4

21 Aug, 2019 | 03:41 PM
image

(எம்.மனோசித்ரா)

மொழியால் பிரிவினைவாதம் ஏற்பட்டதைப் போன்று மதத்தால் ஏற்பட்டுள்ள பிரிவினை வாதத்தால் மீண்டும் ஒரு யுத்தத்திற்குச் செல்ல முடியாது என்று தெரிவித்த பெருநகர் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக ரணவக்க, காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த நாட்டின் சட்டம் நீதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. 

இதனை நாமும் முன்னுதாரணமாக கொண்டு ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கோட்பாட்டிற்குள் வர வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

பாணந்துரையில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ' தேசிய வழி ' மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர் தெரிவித்ததாவது : 

காஷ்மீர் இந்தியாவின் ஒரு மாநிலமாக பிரகடனப்படுத்தப்பட்டு அந்த நாட்டின் சட்டம் நீதிக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது. அதனை நாமும் ஒரே நாடு; ஒரே நீதி என்ற அடிப்படையில் செயற்படுவதற்கான உதாரணமாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். 

தற்போது நாட்டில் சிங்கள , முஸ்லிம் மக்களிடையே பயமும் சந்தேகமும் காணப்படுகின்றது. இவர்களிடம் மாத்திரமல்ல. கிழக்கில் கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரத்தினால் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்கள் மீது அதிருப்தியடைந்துள்ளனர். 

 மக்கள் மத்தியில் இன்றும் நம்பிக்கையின்மை காணப்படுகின்றமையே அதற்கான காரணமாகும். எனவே மனித நேயத்துடன் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மண்டியிடாத, அதற்கு எதிராக போராடக் கூடிய மக்கள் சக்தி உருவாக்கப்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 14:44:07
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44