இலங்கை வரலாற்றில் ஆட்சியிலிருந்த அனைத்து அரசாங்கங்களும் மலையகம், வடக்கு, கிழக்கு மற்றும் தென்னிலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகவோ அல்லது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்பெற்றுக் கொடுத்ததாகவோ சரித்திரம் இல்லை என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் நேற்றுக் காலை சிவன் ஆலயத்தில் டிக்கோயா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு உலக சைவ திருச்சபையின் ஏற்பாட்டில் சிவலிங்க சிலை வழங்கி வைக்கப்பட்டது.
அமைச்சர் இராதாகிருஷ்ணன், உலக சைவ திருச்சபையின் தலைவரும், கனடா பெரிய சிவன் ஆலயத்தின் ஸ்தாபகருமான அடியார் விபுலானந்தா மற்றும் பாடசாலை அதிபர் என பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டின் வரலாற்றில் கடந்த 70 வருட காலமாக மாறிமாறி வருகின்ற அரசாங்கங்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான உறுதியான ஒரு தீர்வினை பெற்றுக்கொடுத்ததாக சரித்திரம் இல்லை.
ஆகவே தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என்று நினைத்து வாக்களிப்பதைவிட இந்நாட்டில் ஒரு அரசாங்கம் வர வேண்டும் என நினைத்து தான் வாக்களிக்க வேண்டிய ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதில் ஓரளவு தமிழ் மக்களை நிம்மதியாக வாழவைக்கக் கூடிய ஒரு அரசாங்கத்தை நாம் தெரிவுசெய்ய வேண்டும். அதில் ஜனாதிபதி வேட்பாளர்கள் வருகையை வைத்து தான் தெரிவுசெய்ய வேண்டும். அதற்கான நடவடிக்கையை நாம் முன்னெடுக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM