இலங்கை விடயத்தில் ஐ.நா. கவலை !

Published By: R. Kalaichelvan

21 Aug, 2019 | 11:20 AM
image

(நா.தனுஜா)

இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்டினன்ட் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து கவ­லை­ய­டை­வ­தாக, ஐ.நா.பொதுச்­செ­யலர் அன்­ர­னியோ குட்­டரஸ் தெரி­வித்­துள்ளார். 

ஐக்­கிய நாடு­களின் பொதுச் செய­லாளர் சார்பில், அவரது பேச்­சாளர் ஸ்டீபன் டுஜாரிக்  இதனை குறிப்­பிட்­டுள்ளார்.   

நியூ­யோர்க்கில் நேற்று முன்­தினம் நடந்த நாளாந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் கருத்து வெளி­யிட்ட போதே அவர் இதனைக் கூறினார்.

“இலங்­கையின்  இரா­ணுவத் தள­ப­தி­யாக லெப்.ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை குறித்து சிலர் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தனர்.

ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­யகம், ஏற்­க­னவே வெளி­யிட்­டுள்ள அறிக்­கையை நீங்கள் பார்த்­தி­ருப்­பீர்கள். எமது தரப்பில், இந்த நிய­மனம் குறித்து நாங்­களும் கவ­லை­ய­டை­கிறோம்.

ஐ.நா அமை­தி­காப்பு நட­வ­டிக்­கை­களில்,நிறுத்­தப்­பட்­டுள்ள அனைத்து பணி­யா­ளர்­களும், மிக­உ­யர்ந்த மனித உரிமை தரங்­க­ளுக்கு அமைய இருக்க வேண்டும் என்ற விட­யத்தில், ஐ.நா உறு­தி­யுடன் உள்­ளது.

ஐ.நா அமை­தி­காப்பு நட­வ­டிக்­கை­களில் பங்­கேற்கும் அனைத்து சிறி­லங்கா சீருடை பணி­யா­ளர்­களும் விரி­வான மனித உரி­மைகள் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்கள்.” என்றும் அவர் தெரி­வித்தார்.

இதே­வேளை  இரா­ணு­வத்தின் புதிய தள­ப­தி­யாக மேஜர் ஜெனரல் சவேந்­திர சில்வா நிய­மிக்­கப்­பட்­டதைத் தொடர்ந்து,   ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் அலு­வ­லகம்  அறிக்கை  வெ ளியிட்­டுள்­ளது. . அதில்   குறிப்­பி­டப்­பட்­டுள்­ள­தா­வது :

போர்க்­குற்­றங்கள் மற்றும் மனி­தா­பி­மா­னத்­திற்கு எதி­ரான குற்­றங்­களில் ஈடு­பட்­ட­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் அறிக்­கை­களில் அடுத்­த­டுத்து குற்­றஞ்­சாட்­டப்­பட்ட இலங்கை இரா­ணு­வத்தின் உயர்­மட்ட அதி­கா­ரி­யொ­ருவர், இரா­ணு­வத்தின் புதிய தள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்பில் ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் ஆணை­யாளர் மிச்சேல் பச்லெட் வெகு­வாக அவ­தானம் செலுத்­தி­யி­ருக்­கிறார்.

சர்­வ­தேச மனித உரிமை மற்றும் மனி­தா­பி­மானச் சட்­டங்­க­ளுக்கு எதி­ராக லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்­வாவும் அவ­ரது படை­ய­ணியும் பல்­வேறு குற்­றங்­களைப் புரிந்­த­தாகக் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டுள்ள போதி­லும்­கூட, அவர் இரா­ணு­வத்­த­ள­ப­தி­யாக நிய­மிக்­கப்­பட்­டமை குறித்து நான் மிகுந்த கவ­லை­ய­டை­கின்றேன் என்று ஆணை­யாளர் பச்லெட் குறிப்­பிட்­டி­ருக்­கிறார்.

சவேந்­திர சில்வா இரா­ணுவ அலு­வ­லகப் பிர­தா­னி­யாக நிய­மிக்­கப்­பட்ட போது, அது கவ­லைக்­கு­ரிய விட­ய­மாகும் என்று மிச்சேல் பச்லெட் கடந்த மார்ச் மாதம் நடை­பெற்ற ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் கூட்­டத்­தொ­டரின் போது சமர்ப்­பித்த தனது அறிக்­கையில் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

2009 ஆம் ஆண்டு நடை­பெற்ற விடு­தலைப் புலி­க­ளுக்கு எதி­ரான இறு­தி­யுத்­தத்தின் போது லெப்­டினன் ஜெனரல் சவேந்­திர சில்வா 58 ஆவது படைப்­பி­ரி­விற்குத் தலை­மை­தாங்­கினார். அவ­ரது அந்தப் படை­யணி சர்­வ­தேச மனித உரி­மைகள் சட்­டங்­களை மீறும் வகை­யி­லான குற்­றச்­செ­யல்­களைப் புரிந்­த­தாக ஐக்­கிய நாடுகள் சபையின் விசா­ர­ணைகள் மூலம் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

சவேந்­திர சில்­வாவின் இப்­ப­தவி உயர்­வா­னது, ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் 30(1) தீர்­மா­னத்தின் பின்­ன­ணியில் நீதி­யையும், பொறுப்­புக்­கூ­ற­லையும் நிறை­வேற்­று­வதில் இலங்­கைக்குக் காணப்­படும் பற்­று­று­திக்குக் குந்­தகம் விளை­விப்­ப­தாக அமையும் என்றும் ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் கவலை வெளி­யிட்­டி­ருக்­கிறார். 

அத்தோடு இது நல்லிணக்கப்பொறிமுறைகளை மங்கச்செய்வதுடன், குறிப்பாக போரினால் பல்வேறு துன்பங்களை அனுபவித்தவர்களின் பார்வையில் பெரும் பாதிப்பாக அமையும். மேலும் பாதுகாப்புத்துறை மறுசீரமைப்புத் தேவை ஏற்படுவதுடன், ஐ.நாவின் அமைதிகாக்கும் படையணியில் இலங்கை தொடர்ந்து பங்களிப்பை வழங்குவதற்கான இயலுமையையும் பாதிக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47