மஸ்கெலியா நகரத்தை அழகு படுத்தும் நோக்கில் பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த பூச் சாடிகள் இனந்தெரியாதவர்களால் உடைத்தெறியப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் காரியாலயம் மற்றும் மாகாண அபிவிருத்தி காரியாலயம் ஆகியன இணைந்து அழகிய நகரம் வேலைத்திட்டத்தின் கீழ் மஸ்கெலியா நகரத்தை அழகுபடுத்தும் நோக்கில் பல இடங்களில் பூச் சாடிகளில் பூமரக் கன்றுகள் வைக்கப்பட்டன.
அத்தோடு நமது நாட்டின் தேசிய மரமான நாக மரம் வைக்கப்பட்டது. அவ்வாறு வைக்கப்பட்ட சில பூச் சாடிகள் இனந்தெரியாதவர்களால் உடைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சென்று பார்வையிட்டதுடன் இச் செயலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டார்.
நகரின் பாதுகாப்புக் கருதியும் அரச உடமைகளை சேதப்படுத்துபவர்களை கண்டறியவும் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM