மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைச் செய்த கணவர் நஞ்சருந்தி தற்கொலை

Published By: Digital Desk 4

20 Aug, 2019 | 10:00 PM
image

(செ.தேன்மொழி)

மெதிரிகிரிய பகுதியில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலைச் செய்த கணவரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

Image result for suicide

மெதிரிகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தியசென்புற பகுதியில் இன்று செவ்வாய்கிழமை காலை 6 மணியளவில் கணவனால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட பெண்ணெர்ருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது தம்பதியினர் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக ஏற்பட்ட மேதலில் , கணவன் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார். இந்நிலையில் படுகாயமடைந்த மனைவி மெதிரிகிரிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதின் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனை தொடர்ந்து சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸாருக்கு , சம்பவத்தின் பின்னர் கணவரும் நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

சம்பவத்தின் போது தியசென்புற பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய மஞ்சுளா குமாரி மற்றும் அவருடைய கணவனான 48 வயதுடைய கருணாரத்ன பண்டா என்பவர்களே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

மெதிரிகிரிய பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40