(ஆர்.விதுஷா)
போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவரும் விசேட தேடுதல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது இவ்வருடத்தின் இது வரையான சுமார் ஏழரை மாததில் 452 கிலோ ஹெரோயினும் 2398 கிலோ கேரளா கஞ்சாவும் கைப்பற்றப்பட்டன.
கடந்த வருடத்தின் இதே காலப்பகுதியின் போது கைப்பற்றப்பட்ட போதைப்பொருளுடன் ஒப்பிடும் போது இவ்வருடம் அதிகளவான போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த வருடம் முழுவதுமாக 232 கிலோ ஹெரோயின் போதைப்பொருளும் 2113 கிலோ கேரளாகஞ்சாவும் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்த நடவடிக்கை தொடர்பிலான புள்ளிவிபரத்தை கடற்படை வெளியிட்டிருந்தது. இது தொடர்பில் கடற்படை ஊடகப்பேச்சாளர் லெப்டினன் கொமாண்டர் இசுறு சூரியபண்டாரவிடம் வினவிய போது.
போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரத்தை அண்டிய பகுதிகளிலேயே அதிகளவில் இடம் பெறுவதாகவும் கடற்படை தளபதி வையிஸ் அத்மிரல் பியர் த சில்வாவின் ஆலோசனைக்கு அமைய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை தொடர்பிலான முறியடிப்புக்களை தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM