வெடிபொருட்களை விநியோகிப்பதில் பொருத்தமான முறைமையொன்றை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

Published By: Digital Desk 4

20 Aug, 2019 | 05:08 PM
image

வெடிபொருட்களை விநியோகிக்கும்போது இடம்பெறும் முறைகேடுகளை குறைத்து உரிய முறையில் வெடிபொருட்களை விநியோகிக்கும் முறைமையொன்றை உருவாக்குவது தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (20) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

அனுமதி பத்திரம் பெறாத கற் சுரங்கங்கள் மற்றும் மீன் பிடிப்பதற்கு வெடிபொருட்களை பயன்படுத்துவதன் காரணமாக ஏற்படும் பாரிய சூழல் பாதிப்புகள் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டதுடன், அத்தகைய முறைகேடுகளை தவிர்க்கும் முகமாக வெடிபொருட்களை விநியோகிக்கும் முறைகள் மற்றும் முகாமைத்துவம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெடிபொருட்களை விநியோகிக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென குறித்த அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார் வெடிபொருட்கள் விநியோகம் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நிறுவனங்கள் முறையான ஒருங்கிணைப்பை பேண வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி அவர்கள், உத்தேச புதிய முறைமைகளை வடிவமைக்கும்போது குறித்த நிறுவனங்களின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, அமைச்சுக்களின் செயலாளர்கள், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா உள்ளிட்ட பாதுகாப்புத்துறை பிரதானிகளும் வெடிபொருட்கள் தொடர்பிலான பிரதி கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31