2005 இல் கோத்தபாய ராஜபக்ச தனது பெயரை வாக்காளர் பதிவில் பதிவு செய்தார் என வெளியாகும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
சிங்கள பத்திரிகையாளர் ஒருவர் தேர்தல் ஆணையகத்திடம் இது குறித்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார் என தெரிவித்துள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான அமைப்பு 2005 இல் வாக்காளர் பதிவில் கோத்தபாய ராஜபக்சவின் பெயர் பதியப்பட்டிருந்தது இலங்கையின் பிரஜையாக இல்லாதபோதிலும் அவர் தேர்தலில் வாக்களித்தார் என குறிப்பி;ட்ட பத்திரிகையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் பொதுஜனபெரமுனவின் வேட்பாளராக போட்டியிடவுள்ளதால் இந்த குற்றச்சாட்டு அதிகம் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் பிரஜையில்லாத ஒருவர் தேர்தல்களில் வாக்களிக்க முடியாது என சுட்டிக்காட்டியுள்ள தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அவ்வாறு வாக்களிப்பது குற்றம் இந்த குற்றத்தில் ஈடுபடுபவர்களை இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின் கீழ் தண்டிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் நிருபிக்கப்பட்டால் அது இலங்கையின் அரசமைப்பையும் சட்டத்தையும் பாராதூரமாக மீறியதாக அமையும் எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் நடைமுறையின் அடிப்படையையே மீறியதாகவும் இது அமையும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்ச தன்மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்பதை நிருபிப்பதற்காக இது குறித்த விசாரணைகளிற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தேர்தல் ஆணையகம் இந்த குற்றச்சாட்டுகள் குறித்த பக்கசார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM