நிர்வாண நிலையில் வீட்டில் சடலமாக கிடந்த தம்பதி: எழுதி வைத்திருந்த கடிதத்தில் வெளிவந்த பகீர் உண்மைகள்

Published By: J.G.Stephan

20 Aug, 2019 | 03:26 PM
image

இந்தியாவின்,  தமிழகத்தில் சேர்ந்த தம்பதி தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவர்கள் கடிதத்தில் எழுதி வைத்திருந்த உருக்கமான வரிகள் குறித்து தெரியவந்துள்ளது. தமிழகத்தை சேர்ந்தவர் ஆர்.ஜெயபாலன்(38). ஒடிசா மாநிலத்தில் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்துள்ளாார்.

இவரது மனைவி மாலினி (35). இவர்களுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் பூர்த்தியாகியுள்ளது. ஆனர் இந்த தம்பதியினருக்கு குழந்தைகள் இல்லை. ஜெயபாலன் தனது மனைவியுடன் அங்குள்ள குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் இரண்டு நாட்களாக அவர்கள் வீடு உள்பக்கமாக பூட்டியிருந்த சூழலில் வீட்டிலிருந்து நேற்று காலை துர்நாற்றம் வீசியது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது ஜெயபாலனும், மாலினியும்
நிர்வாண நிலையில் இறந்து கிடந்தனர். இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படும் நிலையில் உடலை கைப்பற்றிய பொலிசார் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையில் ஜெயபாலன் எழுதிய 4 பக்க கடிதம் வீட்டில் கிடைத்துள்ளது. அதில், தங்களது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றும் குழந்தை இல்லாத ஏக்கத்தால் தற்கொலை செய்து கொண்டதாகவும் எழுதப்பட்டுள்ளது.

மேலும் தங்கள் பெற்றோர், இந்த முடிவுக்காகத் தங்களை மன்னிக்க வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52