பொல்லால் தாக்கி ஒருவர் கொலை - சந்தேக நபர் கைது 

Published By: R. Kalaichelvan

20 Aug, 2019 | 02:43 PM
image

(செ.தேன்மொழி)

சியம்பலான்டுவ பகுதியில் நபரொருவர் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் சந்தேக நபரையும் கைது செய்துள்ளதாக சியம்பலான்டுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

சியம்பலான்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுகொல்லவத்த - தொம்பகஹவெல பகுதியில் நேற்று இரவு நபரொருவர் பொல்லால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது தொம்பகஹவெல பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

உயிரிழந்த நபருக்கும் பிரிதொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவே மேற்படி மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதன்போது பொல்லால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நபர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். பின்னர் சம்பவத்துடன் தொடர்புடைய 27 வயதுடைய சந்தேக நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் பொலிஸார்  இன்று காலை குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். 

சடலம் பிரேத பரிசோதனைகளுக்கா மொணராகலை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.  சியம்பலான்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08