(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் பொதுஜன பெரமுனவின் இளைஞர் அணியின் தேசிய மாநாடு எதிர்வரும் 24ம் திகதி கொழும்பிலுள்ள தாமரை தடாக அரங்கில் காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.
பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொகுதி அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான எதிர்கால கொள்கை திட்டம் இளைஞர் தேசிய மாநாட்டின் போது பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரிடமும், எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிடமும் கையளிக்க்படும். இந்த மாநாட்டை தொடர்ந்து நாடு தழுவிய ரீதியில் ஒவ்வொரு மாகாணத்திலும் பொதுஜன பெரமுனவின் இளைஞர் தேசிய மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவின் மகளிர் அமைப்பின் தேசிய மாநாடு எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை காலை மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. அத்தோடு அதே மண்டபத்தில் அன்று மாலை 2.30 மணிக்கு முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் கூட்டமும் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று செப்டெம்பர் முதலாம் திகதி முற்பகல் 11 மணிக்கு ஆசிரியர் சங்கத்தின் மாநாடும், அன்றைய தினம் மாலை 3.30 க்கு தனியார் பஸ் சாரதிகள் சங்கத்தின் மாநாடும் இடம்பெறவுள்ளது.
செப்டெம்பர் 2 ஆம் திகதி ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் மாநாடு காலை 10 மணிக்கும், பிற்பகல் 2 மணிக்கு உள்ளுராட்சி உறுப்பினர்களின் கூட்டமும் இடம்பெறவுள்ளது. செப்டெம்பர் 4 ஆம் திகதி காலை 10 மணிக்கு பெருந்தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் சிறு ஏற்றுமதியாளர்களது மாநாடும், மாலை 3 மணிக்கு சிரேஷ்ட உறுப்பினர்களுடனான சந்திப்பும் இடம்பெறவுள்ளது. இந்த மாநாடு மற்றும் கூட்டங்கள் அனைத்தும் கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM