ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மட்டு மாவட்ட சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கிவைப்பு

Published By: Digital Desk 4

20 Aug, 2019 | 12:30 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மற்றும் பெற்றோர்களை இழந்த சிறார்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்வு  மட்டக்களப்பில் நடைபெற்றது.

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று (20) கிழக்கு மாகாண ஆளுநர் ஷான் விஜயலால் டி சில்வா தலைமையில் இந்நிகழ்வு ஆரம்பமானது. 

கிழக்கு மாகாண ஊழியர்கள்  நலன்புரி சங்கத்தின் (வெஸ்லோ) சமூக நலன் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் சியோன் தேவாலயத்தில் பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த சிறார்கள் 13 பேருக்கு இவ்வுதவித்தொகை வழங்கி வைக்கப்பட்டது. 

கிழக்கு மாகாண ஊழியர்களின் நலன்புரிச் சங்கத்தின் (வெஸ்லோ) ஊடாக இரண்டு மில்லியன் ரூபா சேகரிக்கப்பட்டு பதிமூன்று சிறார்களின் வயதுகளுக்கேற்ப அப்பணத்தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஊழியர்கள் நலன்புரிச் சங்கத்தின் தலைவி கே. கலாமதி பத்மராஜா  தெரிவித்தார். 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்தன, மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா, மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20