(நா.தினுஷா)
நாடளாவிய ரீதியில் புகையிரத போக்கு வரத்துத் துறையின் அபிவிருத்திப் பணிகளுக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கிடைக்கவுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சில் இடம்பெறவுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று திங்கட்கிழமை அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதன்போது அமைச்சர் மேலும் கூறியதாவது;
போக்குவரத்து அமைச்சு கடந்த ஆறு மாதங்களாக புகையிரதப் போக்குவரத்து துறை மற்றும் பேருந்து போக்குவரத்து துறை சார்ந்த அபிவிருத்திப் பணிகள் குறித்து விசேட கவனம் செலுத்தியிருந்தது. பேருந்து போக்குவரத்து சேவைக்கு அப்பால் புகையிரத போக்குவரத்து சேவையே அதிகளவு மக்களின் போக்குவரத்துக்கு இலகுவானது. அத்துடன் அரசாங்கத்துக்கு அதிக இலாபத்தை பெற்றுக்கொடுப்பதாகவும் இது இருக்கிறது.
புகையிரதப் போக்குவரத்து அபிவிருத்திக்காக 16 கோடி அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தக் கடன் தொகையை மீள் செலுத்துவதற்காக 29 வருட கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. மாத்தறை பெலியத்த புகையிரத பாதையின் அபிவிருத்திப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன. குருணாகல்– -ஹபரண புகையிரதப் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இந்தியா மற்றும் சீனாவிடம் இருந்து புகையிரதப் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. மேலும் புதிதாக 160 புகையிரதப் பெட்டிகளை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் 200 பழைய புகையிரதப் பெட்டிகளை நவீன மயப்படுத்தும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன. முடிந்த அளவுக்கு புகையிரத சேவையை பயன்படுத்துவதற்கு மக்களை இணைத்துக்கொள்வதே எங்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதேபோன்று கொழும்பு பிரதேசத்துக்கு உட்பட்ட களனிவெளி புகையிரதப் பாதையின் அபிவிருத்திப் பணிகளுக்கான உடன்படிக்கைக்கான பணிகளும் நிறைவடைந்துள்ளன. கொழும்பு -– ரம்புக்கண மற்றும் கொழும்பு – களுத்துறை புகையிரத வீதி அபிவிருத்திப் பணிகளுக்கான திட்டமிடல் நடவடிக்கைகளும் நிறைவுக்கு வந்துள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து புகையிரத போக்குவரத்து அபிவிருத்திக்கென்று முதல் முறையாகவே இந்தக் கடனுதவி கிடைக்கப் பொற்றுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியால் வழங்கப்படும் நிதி 32 அபிவிருத்திப் பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது. இதனை பெற்றுக்கொள்வதற்கான ஒப்பந்தம் இன்று செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சில் கைச்சாத்திடப்ப டும்.
மேலும் புகையிரத சேவையின் வினைத்திறனை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ், புகையிரத அனுமதிப் பத்திரம் மற்றும் இருக்கைப் பதிவு செய்யும் பிரிவை விருத்தி செய்வதற்கு விசேட நடவடிக்கை எடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம். இதற்கென்று நவீன கையடக்கத் தெலைபேசிகள், போக்குவரத்து அட்டைகளைப் பயன்படுத்துதல், இணையத்தள அனுமதி கோரல் உள்ளிட்ட புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாடுபூராகவும் மின்சார புகையிரத சேவையை உருவாக்குதல், கொழும்பு புகையிரத கட்டுப்பாட்டு காரியாலயம் மற்றும் புகையிரத செயற்பாட்டு மத்திய நிலையத்தை நிர்மாணித்தல், புகையிரதம் தொடர்பான பயிற்சி மத்திய நிலையம்,பரிசோதனை மற்றும் விற்பனை நிலையங்களை நிர் மாணித்தல், மாலபல்ல புகையிரத நிலை யத்துக்கு அருகிலுள்ள வீடுகளுக்காக 108 மாடிகளைக் கொண்ட தொடர்மாடி வீட் டுத் தொகுதியை நிர்மாணித்தல், இரத் மலானை புகையிரத இயந்திர பொறியியலா ளர் உப திணைக்களத்துக்கென புதிய விற் பனை நிலையம், களஞ்சியசாலை மற்றும் இயந்திரங்களைக் கொள்வனவு செய்தல் உள் ளிட்ட பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக் காக இந்த நிதியை உபயோகப்படுத்த எதிர் பார்த்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM