எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை போட்டியிடுமாறு சபாப் குழுமம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அந்த குழுமத்தின் தலைவர் எம்.ஐ.எம்.நாசர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய சூழ்நிலையில் சிறுபான்மை சமூகத்தின் சார்பில் ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் வேட்பாளராக களமிறங்க வேண்டும். இதற்காக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை களமிறங்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
அண்மைக்காலமாக இலங்கையிலுள்ள முஸ்லிம் சமூகம் பல்வேறு நெருக்கடிகளுக்கு ஆளாகி வரும் நிலையில் இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தனித்துவத்தையும் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட வேண்டும்.
இதற்குப் பொருத்தமானவராக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் காணப்படுகின்றார்.
கடந்த காலங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளும் முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெற்ற வன்முறைகளுக்காக சரியான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
இந்த வகையில் நமது சமூகத்தின் பிரச்சினைகளையும் உரிமையையும் சொல்வதற்காக சர்வதேச மட்டத்துக்கு தெரியப்படுத்துவதற்காக ஒரு முஸ்லிம் வேட்பாளர் களமிறங்க வேண்டும்.
இதற்காக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளு நர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வை வேட் பாளராக போட்டியிடுமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM