கொடிய டெங்கு நோய்த் தாக்கத்தினால் இவ்வருடம் ஜனவரி முதல் ஆகஸ்ட் 16 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் மொத்தம் 56 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 38,180பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரஸ்தாப காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் மாத்திரம் 17,069 பேர் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 8,052 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
தற்போதைய மழையுடன் கூடிய காலநிலையைத் தொடர்ந்து டெங்கு நோய் தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை ஆகிய ஆறு மாவட்டங்கள் டெங்கு வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு நோய் தொடர்பில் பொதுமக்கள் எப்போதும் அவதானம், முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும் என வைத்தியர்கள் வலியுறுத்தியுள்ளனர். காய்ச்சல் ஏற்பட்டவுடன் தாமதியாது அருகிலுள்ள அரச வைத்தியசாலையில் அல்லது தரமான வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிகிச்சை பெற்றும் காய்ச்சல் குணமடையாது இரண்டு நாட்களுக்கு நீடிக்குமானால் முறையான இரத்தப் பரிசோதனை அவசியமெனவும், வீட்டு வைத்தியம் வேண்டாமெனவும் பொதுமக்கள் மேலும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கர்ப்பிணித் தாய்மார்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார் காய்ச்சலினால் பாதிக்கப்படும் முதல் நாளே வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியரினால் சிபார்சு செய்யப்பட்ட மருந்து மாத்திரைகளை மாத்திரம் உட்கொள்வதுடன், வேலைத்தளங்கள், பாடசாலைக்குச் செல்லாது, வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் எனவும் வைத்திய ஆலோசனை தெரிவிக்கின்றது.
அனைத்துவிதமான டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள் தொடர்பில் பொது மக்கள் விஷேட அவதானம் செலுத்த வேண்டுமெனவும், வீடுகள், அலுவலகங்கள், பாடசாலைகள் மற்றும் சுற்றுப்புறச் சூழலை, சுத்தம் சுகாதாரமாகப் பராமரிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களைக் கேட்டுள்ளனர். குறைந்தது வாரமொன்றிற்கு 30 நிமிடங்களை டெங்கு ஒழிப்பு துப்புரவுக்காக ஒதுக்கி, பணியில் ஈடுபட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM