திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை விநோ­த­ முறையில் வெளிப்­ப­டுத்­திய காதலர்

Published By: Digital Desk 3

20 Aug, 2019 | 11:54 AM
image

காதலர் ஒருவர் கடற்­க­ரையில் 250 அடி அக­ல­மான மணல் பரப்பில் இராட்­சத எழுத்­து­களில் எழுதி தனது  திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை விநோ­த­மான முறையில் காத­லி­யிடம் வெளி­யிட்ட சம்­பவம் பிரித்­தா­னிய  சொமர்செட் பிராந்­தி­யத்­தி­லுள்ள பிறியன் டவுண் எனும் இடத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

ஸ்டீவன் காஹில் என்ற நபரே கடற்­கரை மணலில் இராட்­சத எழுத்­து­களில்  "என்னை திரு­மணம் செய்­கி­றாயா ஹெய்டி?" என்ற வாச­கத்தை எழுதி தனது திரு­மணம் செய்­வ­தற்­கான  விருப்­பத்தை வெளி­யிட்­டுள்ளார்.

அவ­ருக்கு கடற்­க­ரையில் இந்த இராட்­சத எழுத்­து­களை எழுத மணல் ஓவியக் கலை­ஞ­ரான சிமன் பெக் உத­வி­யுள்ளார். இந்­நி­லையில் புது­மை­யான முறையில் தனது திரு­மணம் செய்­வ­தற்­கான விருப்­பத்தை வெளி­யிட்ட காத­லரின் செயற்­பாட்டால் கவ­ரப்­பட்ட காத­லி­யான ஹெய்டி மேஸன்­ அவரை திரு­மணம் செய்­வ­தற்கு உடனடியாக சம்­ம­தம் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right