(எம்.ஆர்.எம்.வஸீம்)
ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர்களின் வாக்குகள் பொதுஜன பெரமுனவுக்கு அளிக்கப்படுவதை தடுக்கவே மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிடுகின்றது.
அத்துடன் சட்டப்பிரச்சினைகளை ஏற்படுத்தி கோத்தபாயவின் பயணத்தை தடுக்க முடியாது என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
சோசலிச மக்கள் முன்னணி நேற்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கோத்தபாய ராஜபக்ஷ் எந்த கட்சியையும் சேராதவர். அவர் பொது வேட்பாளராகவே பொதுஜன பெரமுன கட்சியில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார். கோத்தபாயவை தோற்கடிக்கும் நோக்கமே ஐக்கிய தேசிய கட்சிக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இருக்கின்றது. 2015ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் இவர்கள் அனைவரும் ஒரு அணியாக செயற்பட்டு எமக்கெதிராக பிரசாரம் செய்தனர்.
ஆனால் இம்முறை இவர்களுக்கு அவ்வாறு செயற்பட முடியாது. ஏனெனில் கடந்த தேர்தலில் இவர்கள் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் கடந்த நான்கரை வருட ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றவில்லை. அதனால் மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்தவர்கள் இம்முறை ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களிக்கப்போவதில்லை. இதனை உணர்ந்துகொண்டே இம்முறை திட்டமிட்டு மக்கள் விடுதலை முன்னணி தனித்து போட்டியிட தீர்மானித்திருக்கின்றது. இதன் மூலம் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிரானவர்கள் பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிப்பதை தடுக்கலாம். இதுவே இவர்களின் பிரதான திட்டமாகும்.
அத்துடன் வாக்களிப்பின்போதும் முதலாவது தெரிவு மக்கள் விடுதலை முன்னணி என்றும் இரண்டாவது தெரிவு ஐக்கிய தேசிய கட்சி என்றும் வாக்களிக்கவேண்டும் என்றே பிரசாரம் செய்யப்போகின்றனர். இதன் மூலம் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல்போகும் சந்தர்ப்பத்தில், ஐக்கிய தேசிய கட்சிக்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுப்பதே இவர்களின் மற்றுமொரு திட்டமாகும்.
மேலும் சட்டப்பிரச்சினைகளை ஏற்படுத்தி கோத்தபாய ராஜபக்ஷ்வை தடுக்கவும் சிலர் முயற்சித்து வருகின்றனர். கோத்தபாயவின் பிரச்சினை அரசியல் பிரச்சினையாகும். சட்டப்பிரச்சினை அல்ல. அதனால் நீதிமன்றம் மக்களின் அபிலாஷைகளை உணர்ந்துகொண்டே அவருக்கு எதிராக தொடுக்கப்பட்டிருக்கும் வழக்குகளுக்கு தீர்ப்பளிக்கும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது. அதனால் சட்டப்பிரச்சினைகளை ஏற்படுத்தி ஒருபோதும் கோத்தாவின் பயணத்தை தடுக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM