கர்ப்பமானதே தெரியாமல் 3 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்

Published By: Daya

20 Aug, 2019 | 09:13 AM
image

அமெரிக்காவைச் சேர்ந்த  பெண் ஒருவர் கர்ப்பமானதே தெரியாமல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பிரசுவித்துள்ளார். 

அமெரிக்காவின் தெற்கு டகோட்டா மாகாணத்தை சேர்ந்த தம்பதி ஆஸ்டின்-டேனெட் கில்ட்ஸ். இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் டேனெட் கில்ட்சுக்கு கடந்த சில வாரங்களாக அடிவயிற்றில் வலி இருந்து வந்தது. அவர் தனது சிறுநீரகத்தில் கல் இருப்பதாக நினைத்துக்கொண்டார்.

 

இந்நிலையில், கடந்த 10ஆம் திகதி  குறித்த பெண்ணுக்கு வயிற்று வலி அதிகமானது. இதையடுத்து ஆஸ்டின் அவரை அருகில் உள்ள வைத்தியசாலைக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுக்கு ஒரு ஆச்சரியமான அதிர்ச்சி காத்திருந்தது. வைத்தியர்கள் டேனெட் கில்ட்சை பரிசோதித்தபோது அவர் கர்ப்பமாக இருப்பதும், அவர் கர்ப்பம் தரித்து 34 வாரங்கள் ஆனதும் தெரியவந்தது.

இந்நிலையில்  டேனெட் கில்ட்சுக்கு பிரசவ வலி  ஏற்பட்டு உடனே அவருக்கு பிரசவம் பார்க்கப்பட்டது. 

குறித்த பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறந்தன. 2 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. 3 குழந்தைகளும் தலா 2 கிலோ எடையில் நலமுடன் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right