ஒரு கோடி ரூபாய் பெறுமதியான போதைப் பொருட்களுடன் இருவர் கைது 

Published By: Digital Desk 4

19 Aug, 2019 | 10:54 PM
image

(செ.தேன்மொழி)

கந்தானை - புபுதுகம பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியுள்ள போதைப் பொருட்களுடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கந்தானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புபுதுகம பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக காந்தானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

கொழும்பு - மட்டக்குளி பகுதியைச் சேர்ந்த 28,31 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 4.5 கிலோ கிராம் அஸிஸ் போதைப் பொருளும் , 500 கிராம் ஐஸ் போதைப் பொருளும் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் இருவரும் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கந்தானை பொலிஸார் சந்தேக நபர்களை இன்று  திங்கட்கிழமை வெலிசர நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர். இதன்போது நீதிவான் சந்தேக நபர்களை 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01
news-image

மீண்டும் சர்ச்சைக்குள்ளாகும் கச்சத்தீவு விவகாரம் :...

2024-03-18 16:19:36