எதிர்காலத்தில் சகல அரச அதிகாரங்களையும்  ஒருநிலைப்படுத்தி ஆட்சியை தொடர்வோம் -  பிரதமர் 

Published By: Digital Desk 4

19 Aug, 2019 | 06:28 PM
image

(எம்.மனோசித்ரா)

கட்சிசாரா ஜனாதிபதியுடன் அதிகார ரீதியில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்தாக தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , எதிர்காலத்தில் சகல அரச அதிகாரங்களையும்  ஒருநிலைப்படுத்தி நாட்டை அனைத்து துறைகளிலும் வலுப்படுத்துவோம் என்பதில் யாரும் ஐயம் கொள்ள தேவையில்லை  எனவும் குறிப்பிட்டார். 

மாவத்தகம சாமோதய மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்தும் கூறுகையில், 

அரசாங்கத்துக்கு நிலையான அதிகரமோ ஜனாதிபதி அதிகாரங்களோ அற்ற நிலையில் பல்வேறு சவால்களுக்கு மத்தியில் நாட்டில் பல்வேறு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடிந்தது. எதிர்காலத்தில் அனைத்து அதிகாரங்களையும்  ஒருநிலைப்படுத்தி நாட்டை துரித அபிவிருத்தி பாதையில் முன்னெடுக்கப்படும் 

பெரும்பான்மையை கொண்ட அரசாங்கத்தினால் கூட செய்ய முடியாத அபிவிருத்தி பணிகளை நாங்கள் முன்னெடுத்திருந்தோம். 2015 ஆம் ஆண்டு ஆட்சியை நாம் பொறுப்பேற்ற போது சர்வதேச கடன்களை மீள் செலுத்த முடியாத நிலைமே காணப்பட்டது. 

ஆனால் தற்போது நாட்டு நிலைமையை முற்று முழுதாக மாற்றியமைத்துள்ளோம். சர்வதேசம் எம்மீது நம்பிக்கை கொண்டுள்ளது. அனைத்து துறைகளிலும் அபிவிருத்திகள் ஏற்பட்டுள்ளன. 

 சர்வதேச முதலீட்டாளர்கள் இலங்கை மீது ஆர்வம் கொண்டுள்ளனர். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் சுற்றுலாப்பயணகளின் வருகை பின்னவுகளை சந்திருந்தாலும் தற்போது அந்த நிலை மாற்றமடைந்துள்ளது. 

அரசாங்கத்தில் கூடிய அதிகாரங்கள் அற்ற நிலையில் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தோம். எதிர்காலத்தில் அனைத்து பதவிகளுகாகன அரச அதிகாரங்களைப் பெற்று இதனை விட பன்மடங்கு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கவுள்ளோம். 

சந்தேகம் கொள்ளவேண்டியதில்லை. கட்சிக்கு அப்பால் செயற்படும் ஜனாதிபதி ஒருவருடன் இந்தளவு அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கக் கூடியதாக இருந்த நிலையில் முழுமையாக அதிகாரங்கள் கிடைப்பெறும் பட்சத்தில் இந்த நிலை மேலும் விருத்தி பெறும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36
news-image

அட்டன் – கொழும்பு மார்க்கத்தில் மாத்திரமே...

2024-04-18 16:20:52
news-image

கண்டி நகரில் தீவிரமடையும் குப்பை பிரச்சினை!

2024-04-18 16:31:50