வடக்கு மக்கள் மஹிந்தவை ஆதரிக்க வேண்டும்  யாழில் தினேஷ் குணவர்தன 

Published By: Digital Desk 4

19 Aug, 2019 | 06:17 PM
image

வடக்கு உட்பட முழு நாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமானால் தமிழ் மக்களும் ஏனைய இன மக்களும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான எமது கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

பருத்தித்துறையில் இன்று  திங்கட்கிழமை இடம்பெற்ற அகில இலங்கை மோட்டார் போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த தினேஷ் குணவர்தன, 

நான்கரை வருடங்கள் இந்த அரசாங்கம் ஆட்சி செய்துள்ளது. தமிழ் தலைமைகளுக்கூடாக கிடைக்கும் என்று எதிர்பார்த்த எந்தவொரு உதவியும் இந்த அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை. 

வடக்கில் மாற்றத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்தியது எமது அரசாங்கமேயாகும். எனவே வடக்கிலும், தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமின்றி முழு நாட்டிலும் எம்மால் மாத்திரமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும். 

மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே வடக்கிலுள்ள இளைஞர்கள் உள்ளிட்ட அனைவர் வாழ்வில் மாற்றத்தை காண முடியும். இந்த மாற்றத்தை எமக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஏற்படுத்த முடியும் என்று பொறுப்புணர்வுடன் கூறுகின்றேன். 

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு வருகின்றது. பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53