'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழர்களை நம்பவைத்துக் ஏமாற்றும் போக்கே எஞ்சியிருக்கிறது

Published By: J.G.Stephan

19 Aug, 2019 | 03:54 PM
image

(நா.தனுஜா)

'அரசியல் தீர்வுத்திட்டம்' என்று தமிழ் மக்களை நம்ப வைத்துக் காலத்தைக் கடத்துவது ஒன்றே எஞ்சியிருக்கிறது. அதிகார அரசியலைப் பயன்படுத்தி கிழக்கில் தமிழ் மக்களின் அனைத்து வாய்ப்புக்களையும் சூறையாடும் அராஜக அரசியலையும் முடிவிற்குக் கொண்டு வரும் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிக்கே இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சி தெரிவித்துள்ளது. 

இவ்விடயம் குறித்து இலங்கை தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவரும் இலங்கை இந்து சம்மேளனத்தின் தலைவருமான நாரா.டி.அருண்காந்த் மேலும் கூறியதாவது,

தமிழ் மக்களிடம் எஞ்சியிருக்கும் காணிகளையும், இரு மாகாண சபைகளையும் தக்கவைத்துக் கொள்வதே பெரும்பாடாய் இருக்கும் சூழ்நிலையில் யதார்த்த அரசியல் சூழ்நிலைகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற அரசியலில் தமிழ்த் தலைவர்கள் ஈடுபட வேண்டும். 

ஒருபுறம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள பொதுமக்களின் காணிகளை மீட்கும் போது மறுபுறம் கிழக்கு மாகாணத்திலும், வன்னியிலும் தமிழ் மக்களின் காணிகள் ஏனையோரால் கபளீகரம் செய்யப்படுகின்றது. இவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் பிரதிநிதிகளின் ஆதரவுடன் தமிழ்மக்களின் மண்ணிலுள்ள வளங்கள் மணல் மாஃபியாக்களால் சூறையாடப்பட்டு வருகின்றது.

வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளியில் நடைபெற்றுவரும் ஹில்மனைட் கலந்த மண் அகழ்வு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் மண் அகழ்வு போன்ற செயற்பாடுகள் தமிழ் அதிகாரிகள் மற்றும் தமிழ் பேசும் அரசியல்வாதிகளின் ஆதரவுடனேயே மேற்கொள்ளப்படுவதாகக் கூறப்படுகின்றது. 

இந்நிலையில் 'தீர்வுத்திட்டம்' என்று தமிழ் மக்களை நம்பவைத்துக் காலத்தைக் கடத்துவது ஒன்றே எஞ்சியிருக்கிறது. தமிழ் இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகளையும், அதிகார அரசியலைப் பயன்படுத்தி கிழக்கில் தமிழ் மக்களின் அனைத்து வாய்ப்புக்களையும் சூறையாடும் அராஜக அரசியலையும் முடிவிற்குக் கொண்டுவரும் கொள்கைகளை முன்வைக்கும் கட்சிக்கே இனிவரும் காலங்களில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

அந்தவகையில் இவ்விடயங்களை முன்நிறுத்தி தேசிய கட்சிகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பினைப் பெற்றுக்கொடுப்பதே எம்முடைய பிரதான கோரிக்கையாகும். இந்நோக்கத்தை அடைவதற்காக இந்திய அரசாங்கத்துடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தவிருக்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00