19 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்

Published By: Digital Desk 3

19 Aug, 2019 | 04:37 PM
image

றுகுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பகிடிவதையில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டுடன் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட றுகுணு பல்கலைக்கழகத்தின் 19 மாணவர்களுக்களையுமே எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது றுகுணு பல்கலைகழகத்தின் மாணவர்களான இவர்கள் , பல்கலைக்கழகத்தின் முதல் ஆண்டு மாணவனான 22 வயதுடைய ஓருவரை , மெத்தவத்த விடுதியில் வைத்து பகிடிவதை செய்துள்ளதாக மன்றில் தெரிவித்த பொலிஸார் இவர்கள் குறித்து விசாரணைகள் தொடர்வதால், சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதனை தொடர்ந்து  நீதிவான் சந்தேக நபர்களை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மாணவனின் வைத்திய சான்றிதழையும் எதிர்வரும் வழக்கு விசாரணைகளின் போது மன்றில் சமர்பிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். 

இவ்வாறு பகிடிவதைக்கு உள்ளாகியதாக குறிப்பிடப்படும் மாணவன் சமூக வலைத்தலங்களின் ஊடாக காணொளியொன்றை வெளியிட்டிருந்தார். பின்னர் இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்திய ஊடகங்கள் இந்த மாணவனை அழைத்து சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். 

ஊடகங்களில் வெளிவந்த தகவலை அடுத்து பொலிஸார் சந்தேக நபர்களான மாணவர்களை கைது செய்திருந்தனர். பின்னர் பொலிஸார் சந்தேக நபர்களை நீதிவான் நிதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது நீதிவான் நேற்று திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13