வடக்கு ஆப்பிரிக்காவில் 14 வயது சிறுவன், பாலியல் இன்பத்திற்காக துணி தைக்கும் ஊசியை பயன்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
துனிசியா நாட்டின் துனிஸ் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவனொருவன், மூன்று தினங்களாக சிறுநீர் கழிக்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அவர் உடனடியாக அருகில் இருக்கும் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார்.
அப்போது முதலில் காரணம் என்ன என்று தெரியாமலிருந்த வைத்தியர்கள் அதன் பின் ஸ்கேன் செய்து பார்த்த போது, அவருடைய மர்ம உறுப்பில், துணி தைக்கும் ஊசி இருப்பதைக் கண்டு வைத்தியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர், அதனை அகற்றம் நோக்கில் நடத்தப்பட்ட சிகிச்சையில், மர்ம உறுப்பில் இருந்து 9 செ.மீற்றர் நீளமுள்ள ஊசியை நீக்கியுள்ளனர்.
இது குறித்து, அந்நாட்டு ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், சிறுவன் பாலியல் இன்பத்திற்காக ஊசியை பயன்படுத்தியுள்ளான், அதுவே இறுதியில் விபரீதத்தில் முடிந்துள்ளது. அதுமட்டுமின்றி சிகிச்சைக்கு பின் சிறுவனை மனநல வைத்தியர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளான்.
அப்போது அவனை பரிசோதித்த வைத்தியர்கள் சிறுவன் நல்ல நிலையில் இருக்கிறான், அவனுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறியுள்ளார், இதையடுத்து சிகிச்சை முடிந்த அடுத்த நாளே சிறுவன் வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும் வைத்தியர்கள் கூறுகையில், இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. என்ன தான் பாலியல் பொம்மைகள் விற்கப்பட்டாலும், பாலியல் இன்பத்திற்காக சிலர் வயர், நாடாக்கள், ஸ்டரா, சிறிய வகை மின்குமிழ்கள் போன்றவை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர்.
இது பெரிய உயிர் ஆபத்தை ஏற்படுத்தவல்லதென்றும் குறிப்பிட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM