(ஆர்.யசி)
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு நாளை மறுதினம் மீண்டும் பாராளுமன்ற தெரிவிக்குழு முன்னிலையில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதியையும் அழைக்க தீர்மானம் எடுத்துள்ளனர்.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு தமது விசாரணைகளை முன்னெடுத்துவருகின்ற நிலையில் இறுதியாக இரண்டு விசாரணைகள் மாத்திரம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் நாளை ஜனாதிபதி ஆணைக்குழுவை நெறிப்படுத்திய உயர்நீதிமன்ற நீதியரசர் விஜித மலல்கொட மற்றும் அதன் உறுப்பினர்களான முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன ஆகிய மூவருக்கும் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் இந்த வார இறுதிக்குள் ஜனாதிபதிக்கும் தெரிவுக்குழு முன்னிலையில் ஆஜராக ஏற்கனவே தெரிவுக்குழு தெரிவித்துள்ள நிலையில் 20ஆம் திகதியில் இருந்து 23 ஆம் திகதிக்குள் ஜனாதிபதிக்கு இலகுவான ஒரு தினத்தில் தெரிவுக்குழுவிற்கு வரலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
அதற்கமைய ஜனாதிபதி இந்த வாரத்தில் ஒரு தினத்தை தெரிவுசெய்து தெரிவுக்குழுவிற்கு அனுப்புவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM