அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆலம்குளம் கிராம குடியிருப்புப் பிரதேசத்தில் காட்டு யானைகள் சில இன்று(18) அதிகாலை உட்புகுந்து கடும் சேதங்களை உண்டாக்கியுள்ளன.
அதிகாலை ஒரு மணியளவில் மக்கள் குடியிருப்புப் பிரதேசத்திற்குள் உட்புகுந்த இக்காட்டு யானைகள் சேதங்களை உண்டு பண்ண எத்தனித்த வேளையில் அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டு அக்காட்டு யானைகளை விரட்ட முற்பட்ட போது பொதுமக்களை தாக்குவதற்கு காட்டு யானைகள் எத்தனித்தாகவும், யானைகளின் தாக்குதலிலிருந்து தாம் தெய்வாதீனமாக உயிர் தப்பியதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
மக்கள் குடியிருப்புகளில் இருந்த மதிற்சுவர்கள் சிலவற்றையும், நுழைவாயில் கதவு, பாதுகாப்பு வேலிகள் போன்றவற்றை உடைத்து நாசம் செய்துள்ளதுடன், பெறுமதி மிக்க மரங்கள் சிலவற்றையும் சேதப்படுத்தியுள்ளதுடன் மேட்டு நிலப் பயிர்கள் மற்றும் மரம் செடி கொடிகள் சிலவற்றையும் இவ் யானைகள் தாக்கியுள்ளன.
இரவு வேளைகளில் காட்டு யானைகள் பல இப்பிரதேசத்தில் நடமாடுவதால் பல்வேறான இன்னல்களுக்கு தாம் தினமும் முகம் கொடுத்து வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அட்டாளைச்சேனை நகர்ப் பகுதியிலிருந்து சுமார் 13 கிலோமீற்றர் தொலைவில் உள்ள எல்லைப்புறக் கிராமமான ஆலம்குளம்; கிராமம் வயலும் வயல் சார்ந்த பிரதேசத்தில் அமையப் பெற்றுள்ளது. வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெருந்தொகையான மக்கள் காட்டு யானைகளின் தொல்லையால் அடிக்கடி பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சிறுபோக நெல் அறுவடை மற்றும் கரும்புச் செய்கை போன்றன இடம்பெற்றதனைத் தொடர்ந்து அண்மைக் காலமாக இரவுப் பொழுதுகளில் மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகளுக்குள் உட்புகுந்து உப உணவுப் பயிரச் செய்கைகள், விவசாயச் செய்கைகள், மரம் செடி கொடிகள் போன்றவற்றை காட்டு யானைகள் நாசம் செய்து வருவதுடன், தமது குடியிருப்புக்களையும் சேதமாக்கி வருவதாகவும் கவலையுடன் தெரிவிக்கும் பிரதேச மக்கள்,
அன்றாடம் தமது உயிருக்கு யானைகளால் ஏதும் நடந்து விடுமோன என்ற அச்ச உணர்வுடனே தமது இரவு பொழுதுகளைக் கழித்து வருவதாகவும் கவலையுடன் இம்மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM