(எம்.எம்.சில்வெஸ்டர்)
97 ஆவது தேசிய மெய்வல்லுநர் போட்டியின் 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப்போட்டியில் அட்டனைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தினை சுவீகரித்தார்.
ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்ற இராணுவத்தைச் சேர்ந்த குமார் சண்முகேஸ்வரன், போட்டித் தூரத்தை 31.47 நிமிடங்களில் ஓடி முடித்து முதலிடம் பிடித்தார். இதன்மூலம் நேபாளத்தில் நடைபெறவுள்ள தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தகுதி பெற்றுள்ளார்.
தனது வெற்றி குறித்து ‘வீரகேசரி வாரவெளியீட்டு’ க்கு பிரத்தியேகமாக கருத்து தெரிவிக்கையில்,
“இந்த வெற்றி எனக்கு மிகுந்த உத்வேகத்தை தந்தது. தெற்காசியப் போட்டியில் பங்குகொண்டு இலங்கைக்கு தங்கப் பதக்கமொன்றை பெற்றுக் கொடுப்பதே எனது இலட்சியமாகும். இப்போட்டி பிற்பகல் வேளையில் நடைபெற்றமை ஓடுவதற்கு கடினமாக இருந்தது. எனது எதிர் போட்டியாளர்களுடன் கடுமையாக போராட வேண்டியிருந்தது. நானும் எதிர்காலத்தில் மேலும் முன்னேற்றமடைந்து சிறந்த நேரப் பெறுதியில் ஓடி தேசிய சாதனையை முறியடிக்க எதிர்பார்த்துள்ளேன்” என்றார்.
இப்போட்டியின் இரண் டாம் இடத்தை எம்.யூ. குமாரவும் மூன்றாம் இடத்தை குமார பண்டாரவும் பெற்றுக் கொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM