ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 41ஆவது லீக் போட்டியில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணியை, ரோஹித் ஷர்மாவின் மும்பை அணி வெற்றிகொண்டது. இந்தப் போட்டியின் இறுதியில் அதிரடி காட்டிய பட்லர் 29 ஓட்டங்களை விளாச மும்பை அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட பெங்களூர் அணியை பணித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களைக் குவித்தது.
பெங்களூர் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக விராட் கோஹ்லி மற்றும் அதிரடி ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி ரசிகர்களுக்கு அதிரடி விருந்து படைக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கோஹ்லி 7 ஓட்டங்களுடனும் கிறிஸ் கெய்ல் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றினர்.
அதன்பிறகு ஜோடி சேர்ந்த மற்றொரு அதிரடி ஆட்டக்காரரான டிவில்லியர்ஸ் மற்றும் ராகுல் ஜோடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தியது. இதில் சற்று நிதானம் கலந்த அதிரடியை காட்டிய டிவில்லியர்ஸ் 24 ஓட்டங்களுடன் வெளியேற, அடுத்து களம் கண்டார் வொட்சன். இவரும் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க மறுமுனையில் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த ராகுலுடன் ஜோடி சேர்ந்தார் பேபி. இந்த ஜோடி அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தது.
இதில் ராகுல் 68 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 4 சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். மறுமுனையில் பேபி 25 ஓட்டங்களை எடுக்க பெங்களூர் அணி 151 என்ற ஓட்ட எண்ணிக்கையை எட்டியது.
152 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 153 ஓட்டங்களைப் பெற்று 6 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
இதில் ரோஹித் ஷர்மா(25), பட்டேல்(1), ராயுடு(44), ரானா(9) ஓட்டங்கள் வீதம் பெற்றனர். இறுதிவரை களத்தில் நின்ற பொலார்ட் (35) மற்றும் பட்லர் (29) ஜோடியின் அதிரடி ஆட்டம் மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM