தன்னுடன் தவறாக நடந்துக் கொள்ள முயற்சித்த பொலிஸ் அதிகாரிக்கு எதிராகப் பெண் முறைப்பாடு

Published By: Daya

17 Aug, 2019 | 12:18 PM
image

தலைமன்னார் கிராமப் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர் தலைமன்னார் பொலிஸ் நிலையத்தில் கடமை யாற்றும்  பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு எதிராக நேற்று வெள்ளிக்கிழமை மாலை (16) மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

தன்னுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்வதாகவும் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் ஏற்படுத்து வதாகவும் கூறி தனக்கும் தனது குடும்பத்திற்கும் உரியப் பாதுகாப்பை வழங்குமாறு  கோரி குறித்த முறைப்பாட்டைப் பதிவு செய்துள்ளார். 

தலைமன்னார் கிராமப்பகுதியில் வசிக்கும் எனது கணவர் ஒரு நாள் நள்ளிரவு அவசர முச்சக்கர வண்டி சவாரிக்குச் சென்ற போது வாகன அனுமதி பத்திரம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வீட்டிலே விட்டுச் சென்று விட்டார்.   

இந்த நிலையில்  உடனடியாக எனது தம்பியிடம் குறித்த ஆவணங்களை கொடுத்து அனுப்பினேன். 

சற்று நேரம் கழித்து எனது தம்பி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டதாக தொலைப்பேசி அழைப்பு வந்தது.

 என்னையும் தலைமன்னார் பொலிஸ் நிலையத்திற்கு  அழைத்தனர்.  பொலிஸ் நிலையம் சென்ற போது தம்பி மாடு திருட முயன்றதால் கைது செய்ததாகவும் உன் தம்பியை விட வேண்டும் என்றால் நான் அழைக்கும் இடத்திற்குத் தனியாக வர வேண்டும் என குறித்த பொலிஸ் அதிகாரி ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.

 அதனால் தான் கோபம் அடைந்து பொலிஸ் நிலையத்தில் இருந்து நள்ளிரவே வெளியே வந்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண் குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

 சற்று நேரத்தில் குறித்த பொலிஸ் அதிகாரி அப் பெண்ணின் கையடக்க தொலைப்பேசிக்கு அழைப்பு மேற்கொண்டு தன்னுடைய நிபந்தனைக்கு அடிபணியுமாறு கோரியுள்ளார். 

குறித்த பெண் தனது கணவனின் அறிவுரையின் படி குறித்த பொலிஸ் அதிகாரியின் உரையாடலைப் பதிவு செய்துள்ளார்.

பின்னர் மன்னார் பொலிஸ் அத்தியட்சகரிடம் குறித்த உரையாடல்களை ஒப்படைத்த நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரியை உடனடியாக அமுலுக்கு வரும் விதத்தில் மாற்றம் செய்வதாக வாக்குறுதி அழித்தனர்.

 ஆனால் குறித்த அதிகாரி தொடர்ச்சியாக எந்த ஒரு மாற்றமும் இன்றி அதே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுகின்றார். 

குறித்த பொலிஸ் அதிகாரியின் உண்மை முகத்தை வெளிக்கொண்டு வந்ததால் தொடர்ச்சியாக இரவு நேரங்களில் அச்சுறுத்தல் விடுக்கும் விதமாகச் செயற்படுவதாகவும் பழிவாங்கும் செயற்பாடுகளிலும் ஈடுபடுவதாகவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.

எனவே மனித உரிமைகள் ஆணைக்குழு குறித்த விடையத்தில்  தலையிட்டு நீதியைப் பெற்றுத் தந்து எங்கள் குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி தருமாறு குறித்த முறைப்பாட்டில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது கோரிக்கையை மன்னார் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு எழுத்து மூலம் சமர்ப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58