கனடாவிற்கு சுற்றுலா மேற்கொண்ட அமெரிக்காவின் நிவ் ஜெர்சியைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் ஓநாயின் தாக்குதலுக்குள்ளாகி உயிர்தப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை கனடாவில் ஆல்பர்ட்டாவில் உள்ள பான்ஃப் தேசிய பூங்காவில் இந்த ஓநாயின் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அந்நாட்டின் நேரப்படி அதிகாலை ஒரு மணியளவில், கூடாரதத்தின் உள்ளே குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்த போது, எதிர்பாராத நேரத்தில் கூடாரத்தை கிழித்து கொண்டு ஓநாய் ஒன்று வந்து தாக்கியுள்ளது.
தந்தை மத்தேயுவை மனைவி மற்றும் அவருடைய இரண்டு பிள்ளைகளின் முன்னால் ஓநாய் தூக்கி எறிந்துள்ளது.
இது பற்றி தாய், எலிசா, பேஸ்புக்கில் தெரிவிக்கையில்,
மத்தேயு "ஓநாயை தரையில் புறட்டிபோட்டு, அதன் தாடையை தனது கைகளால் பிளந்தார்" . ஆனால் ஓநாய் மத்தேயுவின் கையைப் பற்றிக் கொண்டு அவரை இழுத்துச் செல்லத் தொடங்கியது, "நான் இழுத்து அவரைத் திரும்பப் பெற முயற்சித்தேன் ”.
அவர் சண்டையிட்டு எங்களை காப்பாற்ற முயற்சிக்கையில் நாங்கள் உதவிக்காக கத்தினோம், ஒரு நித்தியம் போல் உணர்ந்தோம்".
பக்கத்து கூடாரத்தில் இருந்த நபர் எங்கள் குடும்பத்தின் அலறல்களைக் கேட்டு, விரைந்து வந்தார்.. "பின் இடுப்பு பகுதியில்" ஓநாயை உதைத்தார், இதனால் ஓநாய் மத்தேயுவை விட்டுவிட்டு கூடாரத்திலிருந்து வெளியேறியது.
அங்கிருந்த ஆண்கள் அலறிக் கொண்டு ஓநாய் மீது கற்களை எறிந்தனர்.
மத்தேயுவை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்து காயங்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
"நான் மிகவும் மோசமாக இருந்திருக்கலாம், நாங்கள் எல்லோரும் ஒரு முழுமையான குடும்பமாக இங்கே அமர்ந்திருக்கிறோம் என்பதற்கு நாங்கள் மிகவும் நன்றியை தெரிவிக்கிறோம்," என்று அவர் எழுதியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM