(செ.தேன்மொழி)
பொலன்னறுவை பகுதியில் மிகவும் சூட்சுமமான முறையில் இயங்கி வந்த போலி ஆவணங்கள் தயாரிப்பு நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலன்னறுவை - கொதலாவல வீதியில் - ரஜஎல - ஹிங்குரங்கொட பகுதியில் அமைந்துள்ள போலி ஆவண தயாரிப்பு நிலையமொன்று குற்றப் புலனாய்வு பிரிவினர் நேற்றையதினம் இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது நாலக வஜிரகாந்த விக்கிரமகே எனப்படும் 51 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் பொலிஸ் சான்றிதழ்கள் , கல்விச் சான்றிதழ்கள் , பரீட்டை பெறுபேற்று சான்றிதழ்கள் , காணி அத்தாட்சி பத்திரங்கள் , சாரதி அனுமதி பத்திரங்கள் , வைத்திய சான்றிதழ்கள் , நீதிமன்ற ஆவணங்கள் , கிராம சேவகரினால் வழங்கப்படும் சான்றிதழ்கள் , மரம் மற்றும் பலகை வியாபாரத்திற்கான அனுமதிப்பத்திரம் , வனவள சார்ந்த அனுமதிப் பத்திரங்கள் மற்றும் அரச , தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான 86 இறப்பர் முத்திரைகள் மற்றும் 2 அச்சி இயந்திரங்களும் , கணணியொன்றும் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM