மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

Published By: Daya

15 Aug, 2019 | 03:33 PM
image

(செ.தேன்மொழி)

 

சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

ஹாலிஎல - கொஹோவில பகுதியில் புதன்கிழமை முற்பகல்  சந்தேகத்திற்கிடமான முறையில் நபரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நிஷாங்க வீரசிங்க எனப்படும் 30 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். சடலத்தை பிரேத பிரிசோதனைக்காக பதுளை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மரண விசாரணைகளின் போது இவர் மின்சாரம் தாக்கியே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதன்போது உயிரிழந்த நபரின் அயல் வீட்டில் எடுக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின் இணைப்பில் சிக்கியே இவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39