கிளிநொச்சி மாவட்டத்தில் படையினரால் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆவணங்கள் இன்று ஒப்பமிட்டு கையளிக்கும் நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிருஷ்ணபுரம் பகுதியில் படையினரின் பயன்பாட்டில் இருந்த காணிகளே இவ்வாறு கையளிக்கப்பட்டுன. இதற்கான ஆவணங்கள் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் ஒப்பமிட்டு கையளிக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கிளிநொச்சி இராணுவ தலைமையக கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரியவால் இதற்கான ஆவணங்கள் இன்று கையளிக்கப்பட்டது.
காணி விடுவிப்பு தொடர்பில் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ரவிப்பிரிய ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,
இன்று படையினர் வசமிருந்த 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளித்துள்ளதாகவும். இதேவேளை மெலும் காணிகள் விடுவிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவற்றை விடுவிப்பது தொடர்பிலான முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும். தனியார் காணிகள் இவ்வாறு விரைவாக விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடு்கப்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
குறித்த காணி விடுவிப்பு தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் ஆரமைநாயகம் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,
இன்று படையினரால் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் 23 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆவணங்களை இன்று தம்மிடம் கையளித்துள்ளதாகவும், குறித்த விடுவிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் மக்கள் தமது என அடையாளப்படுத்தும் வகையில் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும், குறித்த ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு கரைச்சி பிரதேச செயலகம் ஊடாக கையளிப்பதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM