உலகளாவிய ரீதியிலுள்ள ஆற்றல்மிக்க தொழிலாளர்களை விரைவாக கவர்ந்திழுக்க வேண்டிய தேவை கனடாவுக்கு உள்ளதாக அந்நாட்டு குடிவரவு, அகதிகள் மற்றும் பிரஜாவுரிமை விவகார அமைச்சர் அஹமெட் ஹுஸன் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
கனடாவின் பொருளாதார குடிவரவு முறைமையானது உலகில் மிகவும் வெற்றிகரமான ஒன்றாகத் திகழ்வதாகக் குறிப்பிட்டுள்ள அந்நாட்டு பொருளாதார கூட்டுறவு மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் புதிய அறிக்கைக்கு அவர் வரவேற்பு தெரிவித்தார்.
அந்த அறிக்கை உத்தியோகபூர்வமாக நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையே வெளியிடப்பட்டுள்ளது.
கனடா ஏற்கனவே பலவற்றில் சரியானவற்றை மேற்கொண்டு வருகின்ற போதும் எதிர்கால சவால்களை எதிர்கொள்ள மேலும் பலவற்றைச் செய்ய வேண்டியுள்ளதாக அஹமெட் ஹுஸன் தெரிவித்தார்.
குடிவரவு என்று வரும் போது அதனை கேள்வி கேட்காது இருக்க முடியாது என அவர் சி.பி.சி. ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் வலியுறுத்தினார்.
"சிறந்த குடிவரவு கொள்கையைப் பேணுவதற்கு குடிவரவு முறைமையை தொடர்ந்து விருத்தி செய்ய ஏனையவர்களிடமிருந்து கற்றுக் கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டியுள்ளது" என அவர் கூறினார்.
சில கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புகள் பெரும்பான்மையான கனேடியர்கள் வருடாந்தம் தமது நாட்டால் ஏற்றுக்கொள்ளப்படும் குடியேற்றவாசிகளின் தொகையை மட்டுப்படுத்த விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கின்றன.
இந்நிலையில் அஹமெட் ஹுஸன் கூறுகையில், நாட்டின் பொருளாதாரத்தை ஊக்குவிக்க தொழில் வெற்றிடங்களுக்கு தகைமையுள்ள பணியாளர்களைக் கொண்டு வருவதற்கு ஆதரவளிப்பதாகக் குறிப்பிட்டார்.
''இது தொடர்பில் தவறு மேற்கொள்ளப்படக் கூடாது. நாம் கனடாவுக்கு வெளியிலிருந்து வருபவர்களால பாதிப்பை எதிர்கொள்ளலாம் என்ற தவறான தகவலும் அச்சமும் பரப்பப்பட்டுள்ள நிலையில் அவற்றை முறியடிக்க மேலும் செயலாற்ற வேண்டியுள்ளது'' என அவர் கூறினார்.
இந்நிலையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கனேடிய பொதுத் தேர்தலில் எல்லையைக் கடந்து வரும் புகலிடக்கோரிக்கையாளர்களை அரசாங்கம் கையாளும் விதத்தை உள்ளடக்கி குடியேற்றவாசிகள் தொடர்பான விவாதம் முக்கிய வகிபாகத்தை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடாவின் சனத்தொகை வளர்ச்சியில் 80 சதவீதம் குடியேற்றம் காரணமாக ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த அஹமெட் ஹுஸன், அந்நாட்டில் 1971ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஓய்வு பெற்றவருக்கும் 7 பேர் என்ற வீதத்தில் தொழில் புரிபவர்கள் காணப்பட்டதாகவும் இந்தத் தொகை 2035ஆம் ஆண்டுக்குள் ஓய்வுபெற்றவர் ஒருவருக்கு இரு தொழில் புரிபவர்கள் என மாறும் நிலை தோன்றியுள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.
''எமது வயதாகும் சனத்தொகைக்கு ஏற்ப எமது குடிவரவு முறைமையில் நாம் தொடர்ந்து கவனம் செலுதத்துவதை உறுதிப்படுத்த வேண்டியுள்ளது" என அஹமெட் ஹுஸன் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM