ஒருநாள் தொடரும் இந்தியா வசம்

Published By: Vishnu

15 Aug, 2019 | 11:30 AM
image

மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுக்களினால் வெற்றிபெற்று தொடரை 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது போட்டியில் 59 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிப் பெற்றது. 

தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னணியில் உள்ள இந்திய அணி, நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று இருபதுக்கு - 20 தொடரை போலவே ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் முனைப்பில் களமிறங்கியது.

அதன்படி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நேற்றையதினம்  இரவு 7.00 மணிக்கு இப் போட்டி ஆரம்பாமனது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. பலத்த மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டம், பின்னர் மழை நின்றதும் 35 ஓவர்களாக குறைக்கப்பட்டு தொடங்கப்பட்டது.

மே.இ.தீவுகள் அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிறிஸ் கெயில், இவின் லிவிஸ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 

அபாரமாக ஆடிய கிறிஸ் கெயில் தனது 54 ஆவது ஒருநாள் அரைசதத்தை பதிவு செய்தார்.  10 ஆவது ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின் 114 ரன்களை எடுத்திருந்தது மே.இ.தீவுகள்.

இதன் பின்னர் இவன் லிவிஸ் 10.5 ஆவது ஓவரில் 29 பந்துகளில் 3 ஆறு ஒட்டம், 5 நான்கு ஓட்டம் அடங்கலாக 43 ஓட்டத்துடன் ஆட்டமிழக்க, 11.4 ஆவது ஓவரில் கிறிஸ் கெய்ல் மொத்தமாக 41 பந்துகளை எதிர்கொண்டு 5 ஆறு ஓட்டம், 8 நான்கு ஓட்டம் அடங்கலாக 72 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார் (121-2)

அதன் பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய சிம்ரன் ஹெட்மேயர் 25 ஓட்டத்துடனும், ஷெய் ஹோப் 24 ஓட்டத்துடனும் நிகோலஷ் பூரன் 30 ஓட்டத்துடனும், ஜோசன் ஹொல்டர் 14 ஓட்டத்துடனும், பிரித்வெய்ட் 16 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்தனர்.

இதனால் மேற்கிந்தியத்தீவுகள் அணி 34.4 ஓவரில் 7 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை பெற்றது. இறுதியாக மேற்கிந்தியத்தீவுகள் அணி மட்டுப்படுத்தப்பட்ட 35 ஓவர் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 240 ஓட்டங்களை பெற்றது. ஆடுகளத்தில் பேபியன் அலென் 6 ஓட்டத்துடனும், கீமோ போல் எதுவித ஓட்டமின்றியும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் கலீல் அஹமட் 3 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஷமி 2 விக்கெட்டுக்களையும், சாஹல் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் பின்னர் டக்வெத் லூவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 35 ஓவருக்கு 255 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது. வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 32.3 ஓவர் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் ரோகித் சர்மா 10 ஓட்டத்துடனும், தவான் 36 ஓட்டத்துடனும், ரிஷாத் பந்த் டக்கவுட்டுடனும், ஸரேஸ் ஐயர் 65 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்க ஆடுகளத்தில் இந்திய அணித் தலைவர் விராட் கோலி 99 பந்துகளில் 14 நான்கு ஓட்டம் அடங்கலாக 114 ஓட்டத்துடனும், கேதர் யாதவ் 19 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் மேற்கிந்தியத்தீவுகள் அணி சார்பில் பேபியன் அலென் 2 விக்கெட்டுக்களையும், கேமர் ரோச் ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09
news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49