கிளிமஞ்சாரோ சிகரம் ஏறி இந்திய சிறுவன் சாதனை

Published By: Daya

15 Aug, 2019 | 04:13 PM
image

 ஆபிரிக்க - தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரத்தின் மீது சிறுவன் ஒருவன்  ஏறி சாதனை படைத்துள்ளார். 

இந்தியாவை சேர்ந்த 9 வயதான அத்வைத் பார்தியா கடந்த 31ஆம் திகதி ஆப்பிரிக்க - தான்சானியாவில் கிளிமஞ்சாரோ சிகரத்தின் மீது ஏறி சாதனை படைத்துள்ளான். 

குறித்த சிகரம்  கடல் மட்டத்திலிருந்து 19 ஆயிரத்து 341 அடி உயரமானது.

அத்வைத் பார்தியாவின்   பூர்விகம், மராட்டிய மாநிலம் புனே ஆகும்.

2016ஆம் ஆண்டில் 6 வயதாக இருந்தபோது, அத்வைத் எவரெஸ்ட் சிகர அடிவார முகாமுக்கு ஏறி சாதனை படைத்துள்ளான்.

அடுத்த ஆண்டு ஐரோப்பாவிலேயே உயரமான எல்ப்ரஸ் சிகரம் ஏற அத்வைத் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right