இலங்கையின் முதற்தர மொபைல் விற்பனையின் பின்னரான சேவை வழங்குநரான Cellcity (Pvt) Ltd. நிறுவனமானது சமீபத்தில் MEIZU ஸ்மார்ட் கைத் தொலைபேசிகளை அறிமுகம் செய்து வைத்தது. 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட முன்னணி ஸ்மார்ட் கைத் தொலைபேசி வர்த்தக நாமமான MEIZU உயர்ந்த வடிவமைப்பு மற்றும் mTouch தொழில்நுட்பத்துடனான கைரேகை அடையாள அங்கீகாரம் போன்ற சிறப்பம்சங்களுடன், சர்வதேச தரத்திலான, பிரீமியம் மற்றும் நடுத்தர விலைகளிலான ஸ்மார்ட் கைத் தொலைபேசிகளின் தயாரிப்புக்கு புகழ்பெற்றதாகும். 2,500 க்கும் அதிகமான சேவை மையங்கள் மற்றும் 500,000 க்கும் அதிகமான விற்பனை முகவர்களுடன் MEIZU Technologies நிறுவனமானது உலகளவில் செயற்பட்டுவருகிறது.
ஆண்ட்ராய்ட் 5.0 அடிப்படையிலான பிரத்தியேக Flyme OS உடனான மெய்சு ஸ்மார்ட் கைத் தொலைபேசிகள், சிறந்த பயனர் இடைமுகம், பேட்டரி மேம்படுத்தல்களுடன் பல்வகை பயன்பாட்டின் போது மேம்பட்ட பயனர் அனுபவத்தை தருகின்றன.
பல புதிய அம்சங்களை உள்ளடக்கிய MEIZU MX5 ஸ்மார்ட் கைத் தொலைபேசியானது 3GB RAM மற்றும் 16,32 மற்றும் 64GB உள்ளக மெமரி வசதியினை கொண்டிருப்பதுடன், விரைவான mCharge தொழில்நுட்பத்துடனான 3150mAhபேட்டரியானது சாதாரண பயன்பாட்டு நிலைமைகளில் 2 நாட்கள் வரை நீடிக்கக் கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், வெறுமனே 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் செய்யக் கூடிய வசதியினையும் தருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM