பூட்டிய வீட்டில் சட்டவிரோத மதுபானம்: சந்தேக நபருக்கு வலைவீச்சு

Published By: Digital Desk 3

14 Aug, 2019 | 03:05 PM
image

(செ.தேன்மொழி)

தொடங்கொட பகுதியில் பூட்டப்பட்டிருந்த வீட்டிலிருந்து 3 கோடி ரூபாய் பெறுமதியான சட்டவிரோத மதுபானம் மீட்கப்பட்டுள்ளது.

தொடங்கொட - இம்புட்டுகஹாலந்த பகுதியில் வீடொன்றில் நேற்று புதன்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் தொடங்கொட பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த மதுபான தொகை கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இதன் போது 15 பீப்பாய்களுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 3ஆயிரத்து 750 லீட்டர் தொகை மதுபான ஸ்பிரித்து மீட்கப்பட்டுள்ளது. பொலிஸார் சுற்றிவளைப்பை மேற்கொண்ட போது சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கிடமான நிலையில் ஒருவரும் இருக்கவில்லை என்பதுடன் குறித்த வீடும் பூட்டப்பட்டு இருந்துள்ளது.

இந்நிலையில் சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ள தொடங்கொட பொலிஸார் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21